இலங்கையில் 2010ன் பாராளுமன்றத் தேர்தலும், தமிழர்களின் (கட்சிகளின்) எதிர்காலமும்…
பிரபாகரனின் ஆயுதபலத்தால் மட்டும் தமிழீழ வல்லரசை அமைத்துவிடலாம், அதிலும் கண்மூடித்திறக்கும் போது ஈழம் மலர்ந்து விடும் என்று பிரச்சாரங்களும் பலருடைய போக்குகளும் நடந்த காலம் இன்னும் கண்முன்நின்று அகலவில்லை!!!
இயேசு “அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார். 42. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; 43. மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். 44. அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.(மாற்கு 6:41-44) என்றால் அதன் உள் அர்த்தத்தையும் உண்மையினையும் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மக்கள் இருக்கும்வரையில் எதுகும் மாறப்போவதில்லை!!!
அதே வேதாகமத்தில் “ரோமர் 7:6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
என்றும், “ Iபேதுரு 4:12 பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,” குறிப்பிட்டிருக்கின்றது. இதிலிருந்து எடுத்துரைக்க முயல்வது எதுவாகில்,, யாரிடம் எது கேட்டால் அது எவ்வாறு நடக்கும் என்பதனை ஓரளவிற்கேனும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது, சிங்களவர்கள் பெரும் பகுதியானவர்களாக இருந்த போதிலும், வீதாசாரத்தில் பார்க்கும் போது, சிங்கள கட்சிகளிலும் பார்க்க தமிழ் கட்சிகள் மிக அதிகமாகவே காணப்படுகின்றது. கடந்த காலத்தில் தமிழ் கட்சிகளில் தலைவர்கள் இரகசியம் இரகசியமாக ஒரு வெளிநாட்டு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள் அதன் விளைவு மேலும் தமிழர்களை சின்னாபின்னமாக்கியது. இதில் அரசியல் தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள்போல், டக்ளசும், கருணாவும் பங்கு பெறவேயில்லை… அதற்கு புலிகளின் ஆதரவாளர்களால் தமக்கு ஏதாவது ஆபத்துவரலாம் என்ற ஐயப்பாட்டை மக்களுக்கு வெளியிட்டாலும் அது எத்தனை தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் பார்க்க வேண்டும். குhரணம் அவர்கள் அக்காலத்தில் இலங்கை அமைச்சர்களாக இருந்ததால் சர்வதேச அரசு பார்காப்பு வழங்கியிருக்கும் என்பதும், அதில் ஏதும் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் புலிகளுக்கான பின்னடைவு புலத்தில் மேலும் அதிகரிக்குமேயொழிய, அதன்மூலம் எந்த சிக்கலும் தீர்ந்திருக்காது என்பதனையும் புரிற்து கொள்ளவேண்டும்.
Read more…