Archive

Archive for April 27, 2010

நாடுகடந்த தமிழீழ அரசை விமர்சித்து (CANADA)

April 27, 2010 Leave a comment

நாடுகடந்த தமிழீழ அரசை விமர்சித்து (CANADA)

001 அதன் இணைப்பாளரை கடுமையாக தாக்கியவர்கள் இன்று உங்கள் முன் அதே நாடுகடந்த அரசின் தேர்தலில் குதித்துள்ளதன் உள்நோக்கம் என்ன என்பதை புலம்பெயாந்து வாழும் கனேடிய தமிழ் மக்கள் அறிய வேண்டும் என விரும்புகின்றோம்.
நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் பல்வேறு பட்டவர்கள் தனித்து நின்று போட்டியிடும் வேளையில் 20 பேர் இணைந்த உலகத்தமிழர் இயக்கத்தின் கூட்டமைப்பு இந்த தேர்தல் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட சிலரைத்தவிர ஏனையவர்கள் எதுகுமறியா அப்பாவிகள்.
இவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்ய தார்மீக பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டு என்பதால்இ தொடர்கின்றோம்.

(1)    வனிதா இராஜேந்திரன்
செஞ்சோலை வளாகத்தில் நடைபெற்ற பாரிய இழப்புக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என பணம் சேர்த்தது மகளீர் அமைப்பு. அந்த அமைப்பின் தலைவி தான் வனிதா இராஜேந்திரன். அந்த நிதி சேகரிப்பு மும்மரமாக நடைபெற்ற போதும் சோக்க்கப்பட்ட நிதி பாதிக்கபட்ட மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. அல்லது இதர காரணங்களுக்காக வன்னிக்கு அனுப்பபடவும் இல்லை. இது வரை அதற்க்குரிய கணக்கும் இல்லை!
இவர் உங்கள் பிரதிநிதியாவதற்க்காக உங்கள் முன் வந்து நிற்க்கின்றார். உங்கள் வாக்குகளுக்காக! தேசத்தின் பெயரிலும் நாட்டில் இடம் பெறும் அவலத்தின் பெயரிலும் பணம் சம்பதிக்கும் இவருக்கு உங்கள் வாக்குகள் கிடைப்பதன் ஊடாக அவர் மேலும் தனது சுயத்தை நிலைநிறுத்த முடியும்.
(2)ஈசன் குலசேகரம்

Read more…

Categories: Uncategorized

"சிறுதுளி பெருவெள்ளம்" ஆதரவு கரம் கொடுங்கள்தமிழ் உறவுகளே!…Nanri Thesiyam.org

April 27, 2010 Leave a comment

இத்தாலியில் மரணமடைந்த பெண்தொடர்பக மீண்டும் ஒரு பணிவான வேண்டுதல்!!!

"சிறுதுளி பெருவெள்ளம்" ஆதரவு கரம் கொடுங்கள்தமிழ் உறவுகளே!…

“தமிழீழ” அமைப்புக்களிடமிருந்தும், தமிழ் அமைப்புக்களிடம் இருந்தும், தமிழர்களிடம் இருந்தும், மற்றும் நிறுவன உரிமையாளர்களிடம் இருந்தும் நிதி உதவி கோரப்படுகின்றது!!!  – உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

தமிழர்களின் ஒற்றுமையின் பலத்தை இதனூடாகவும் காட்டவேண்டிநிற்கின்றோம். அதுவாகில், கடந்த காலத்தில் உலகத்தின் அதைத்து தமிழ் இணையங்களிலும் வெளியிடப்பட்ட "இராமர் விஜயலக்ஷ்மியின்" மரணம் (கொலை) தொடர்பாக அனைவரும் அறிந்ததே! குடும் உறவினை தொடர்பு கொள்ள ஆதரவாக இருந்த இணைய மற்றும் இணைய வாசகர்கள்அனைவருக்கும் எமது நன்றிகள்.

அந்த பெண்ணின் உடலத்தை எதிர்பார்த்து, இலங்கை – வவுனியாவில் அவருடைய கணவனும,; 17 வயதையுடைய மகளும் எதிர்பார்த்திருக்கின்றனர். இவர்கள் சிதம்பர புரம் என்னும் இடத்தில் கற்குளத்தில் வசித்துவருகின்றனர். தற்போது உள்ள சூழலில் அவர்களால் பொருளாதார நிலைகளுக்கு முகங்கொடுக்க முடியாது என்பதனை யாரும் சொல்லித் தெரியத் தேவையிருக்காது.

எனவே, அந்த அம்மையாரின் பூதவுடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் பொறுப்பை இத்தாலியில் இருந்து மேற்கொள்ள “ஒருங்கிணைந்த புதிய தலைமுறை ஒன்றியம்” UNGA சம்மதம் தெரிவித்திருந்ததையும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை இத்தாலி மற்றும் இலங்கை அரசுடன் இணைந்து செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக நாம் இணையங்கள் மூலம் ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தோம். எனவே, அதற்கு ஏற்படும் செலவினத்தை விருப்புடைய அன்பர்கள் தந்து உதவுமாறும், செலவு போக மேலதிக பணத்தை அந்த குடும்ப நலனுக்காக கையளிக்க ஆவணசெய்யுமாறும் தமிழ் உறவுகளை வேண்டிநிற்கின்றேன்.

இதில் மக்களால் வழங்கப்படும் எந்த உதவித்தொகையிலும் யாரும் சந்தேகப்படத்தேவையில்லை காரணம் அனைத்துத்தகவலும் இணையவாயிலாக சமர்ப்பிக்கப்படும். அதுபோலவே மீதியாக வருகின்ற பணத்தின் விபரங்களும் இணையவாயிலாக வெளியிடப்படும்.
கடந்த காலங்களில்  தமிழர்களுக்காக குரல்கொடுத்து, எமது ஒற்றுமையினைக்காட்டிய உறவுகள் இதற்கும் ஆதரவு வழங்குவார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.

இது தொடர்பாக நிதி ஆதரவு வழங்க முன்வருவோர் தேவைஏற்படின் கணவனுடனோ, அல்லது மகளுடனோ தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் நிதி அன்பளிப்பினை வழங்கவும், அதற்குத்தேவையான தொடர்பு இலக்கங்களையும் இதில் இணைக்கின்றேன். நேரடியாக அவர்களுக்கு உதவ முன்வருவோருக்கும் எமது நன்றிகள்!!! ஆனால் தற்போது, அந்த பெண்ணின் உடலை இலங்கைக்கு அனுபக்புவது தொடர்பான செலவினை இத்தாலியில் மேற்கொள்வதற்கான உதவியை, உறவுகள் தீர்த்துவைக்க பணிவுடன் வேண்டுகின்றோம். 

கணவனின் தொடர்புகளுக்கு
பொன்னுசாமி இராமர் (0094-0244906650 , 0094- 0779195134)
வீட்டிலக்கம் 76 கற்குளம்- 3
சிதம்பர புரம்
வவுனியா – இலங்கை

ஒன்றியத்தின் அனுமதியுடன்-நிதியை வழங்க வேண்டிய விபரம் (வழங்குவோர் தயவு செய்து தங்கள் விபரங்களை arugan@hotmail.it  or arugan@hotmail.com மெயில் மூலம் அனுபக்பிவைக்குமாறும் வேண்டப்படுகின்றீர்கள்)

வங்கிவிபரம்

image

குறிப்பு-அனைத்து ஊடகங்களும் இத்தால் தெரிவிப்பது, தங்களுடைய வாசகர்களின் அணைவுடன் இதற்கும் ஆதரவு தருமாறு மிகப்பணிவுடன் வேண்டப்படுகின்றீர்கள்- அன்பன், அருகன்.

Categories: Uncategorized
Follow

Get every new post delivered to your Inbox.