“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக் கொண்டு சென்ற தமிழர்களின் வரலாற்றின் பக்கங்களும்…” தொடர் பக்கங்கள்….பாகம்2
தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… – பாகம்1 (பாகம் ஒன்றை வாசிப்பதற்கு இதனை அழுத்தவும். )
“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக் கொண்டு சென்ற தமிழர்களின் வரலாற்றின் பக்கங்களும்…” தொடர் பக்கங்கள்….பாகம்2
சிங்களவர்களின் காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர்கள் இலங்கையில் இருந்தார்கள் என்பதற்கும், அவர்கள் இலங்கையினை ஆண்டார்கள் என்பதற்கும் சான்றுகள் உள. ஆயினும் சிங்களவர்கள் தமது வரலாற்றைத் தக்கபடி நிலைநாட்டிக்கொண்டார்கள். தமிழர்கள் நாமோ, அதனை அன்னியன் கையில் கொடுத்துவிட்டோம்.
நாடுகடந்த தமிழீழ அரசை விமர்சித்து (CANADA)
நாடுகடந்த தமிழீழ அரசை விமர்சித்து (CANADA)
அதன் இணைப்பாளரை கடுமையாக தாக்கியவர்கள் இன்று உங்கள் முன் அதே நாடுகடந்த அரசின் தேர்தலில் குதித்துள்ளதன் உள்நோக்கம் என்ன என்பதை புலம்பெயாந்து வாழும் கனேடிய தமிழ் மக்கள் அறிய வேண்டும் என விரும்புகின்றோம்.
நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் பல்வேறு பட்டவர்கள் தனித்து நின்று போட்டியிடும் வேளையில் 20 பேர் இணைந்த உலகத்தமிழர் இயக்கத்தின் கூட்டமைப்பு இந்த தேர்தல் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட சிலரைத்தவிர ஏனையவர்கள் எதுகுமறியா அப்பாவிகள்.
இவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்ய தார்மீக பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டு என்பதால்இ தொடர்கின்றோம்.
(1) வனிதா இராஜேந்திரன்
செஞ்சோலை வளாகத்தில் நடைபெற்ற பாரிய இழப்புக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என பணம் சேர்த்தது மகளீர் அமைப்பு. அந்த அமைப்பின் தலைவி தான் வனிதா இராஜேந்திரன். அந்த நிதி சேகரிப்பு மும்மரமாக நடைபெற்ற போதும் சோக்க்கப்பட்ட நிதி பாதிக்கபட்ட மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. அல்லது இதர காரணங்களுக்காக வன்னிக்கு அனுப்பபடவும் இல்லை. இது வரை அதற்க்குரிய கணக்கும் இல்லை!
இவர் உங்கள் பிரதிநிதியாவதற்க்காக உங்கள் முன் வந்து நிற்க்கின்றார். உங்கள் வாக்குகளுக்காக! தேசத்தின் பெயரிலும் நாட்டில் இடம் பெறும் அவலத்தின் பெயரிலும் பணம் சம்பதிக்கும் இவருக்கு உங்கள் வாக்குகள் கிடைப்பதன் ஊடாக அவர் மேலும் தனது சுயத்தை நிலைநிறுத்த முடியும்.
(2)ஈசன் குலசேகரம்
"சிறுதுளி பெருவெள்ளம்" ஆதரவு கரம் கொடுங்கள்தமிழ் உறவுகளே!…Nanri Thesiyam.org
இத்தாலியில் மரணமடைந்த பெண்தொடர்பக மீண்டும் ஒரு பணிவான வேண்டுதல்!!!
"சிறுதுளி பெருவெள்ளம்" ஆதரவு கரம் கொடுங்கள்தமிழ் உறவுகளே!…
“தமிழீழ” அமைப்புக்களிடமிருந்தும், தமிழ் அமைப்புக்களிடம் இருந்தும், தமிழர்களிடம் இருந்தும், மற்றும் நிறுவன உரிமையாளர்களிடம் இருந்தும் நிதி உதவி கோரப்படுகின்றது!!! – உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
தமிழர்களின் ஒற்றுமையின் பலத்தை இதனூடாகவும் காட்டவேண்டிநிற்கின்றோம். அதுவாகில், கடந்த காலத்தில் உலகத்தின் அதைத்து தமிழ் இணையங்களிலும் வெளியிடப்பட்ட "இராமர் விஜயலக்ஷ்மியின்" மரணம் (கொலை) தொடர்பாக அனைவரும் அறிந்ததே! குடும் உறவினை தொடர்பு கொள்ள ஆதரவாக இருந்த இணைய மற்றும் இணைய வாசகர்கள்அனைவருக்கும் எமது நன்றிகள்.
அந்த பெண்ணின் உடலத்தை எதிர்பார்த்து, இலங்கை – வவுனியாவில் அவருடைய கணவனும,; 17 வயதையுடைய மகளும் எதிர்பார்த்திருக்கின்றனர். இவர்கள் சிதம்பர புரம் என்னும் இடத்தில் கற்குளத்தில் வசித்துவருகின்றனர். தற்போது உள்ள சூழலில் அவர்களால் பொருளாதார நிலைகளுக்கு முகங்கொடுக்க முடியாது என்பதனை யாரும் சொல்லித் தெரியத் தேவையிருக்காது.
எனவே, அந்த அம்மையாரின் பூதவுடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் பொறுப்பை இத்தாலியில் இருந்து மேற்கொள்ள “ஒருங்கிணைந்த புதிய தலைமுறை ஒன்றியம்” UNGA சம்மதம் தெரிவித்திருந்ததையும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை இத்தாலி மற்றும் இலங்கை அரசுடன் இணைந்து செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக நாம் இணையங்கள் மூலம் ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தோம். எனவே, அதற்கு ஏற்படும் செலவினத்தை விருப்புடைய அன்பர்கள் தந்து உதவுமாறும், செலவு போக மேலதிக பணத்தை அந்த குடும்ப நலனுக்காக கையளிக்க ஆவணசெய்யுமாறும் தமிழ் உறவுகளை வேண்டிநிற்கின்றேன்.
இதில் மக்களால் வழங்கப்படும் எந்த உதவித்தொகையிலும் யாரும் சந்தேகப்படத்தேவையில்லை காரணம் அனைத்துத்தகவலும் இணையவாயிலாக சமர்ப்பிக்கப்படும். அதுபோலவே மீதியாக வருகின்ற பணத்தின் விபரங்களும் இணையவாயிலாக வெளியிடப்படும்.
கடந்த காலங்களில் தமிழர்களுக்காக குரல்கொடுத்து, எமது ஒற்றுமையினைக்காட்டிய உறவுகள் இதற்கும் ஆதரவு வழங்குவார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.
இது தொடர்பாக நிதி ஆதரவு வழங்க முன்வருவோர் தேவைஏற்படின் கணவனுடனோ, அல்லது மகளுடனோ தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் நிதி அன்பளிப்பினை வழங்கவும், அதற்குத்தேவையான தொடர்பு இலக்கங்களையும் இதில் இணைக்கின்றேன். நேரடியாக அவர்களுக்கு உதவ முன்வருவோருக்கும் எமது நன்றிகள்!!! ஆனால் தற்போது, அந்த பெண்ணின் உடலை இலங்கைக்கு அனுபக்புவது தொடர்பான செலவினை இத்தாலியில் மேற்கொள்வதற்கான உதவியை, உறவுகள் தீர்த்துவைக்க பணிவுடன் வேண்டுகின்றோம்.
கணவனின் தொடர்புகளுக்கு
பொன்னுசாமி இராமர் (0094-0244906650 , 0094- 0779195134)
வீட்டிலக்கம் 76 கற்குளம்- 3
சிதம்பர புரம்
வவுனியா – இலங்கை
ஒன்றியத்தின் அனுமதியுடன்-நிதியை வழங்க வேண்டிய விபரம் (வழங்குவோர் தயவு செய்து தங்கள் விபரங்களை arugan@hotmail.it or arugan@hotmail.com மெயில் மூலம் அனுபக்பிவைக்குமாறும் வேண்டப்படுகின்றீர்கள்)
வங்கிவிபரம்
குறிப்பு-அனைத்து ஊடகங்களும் இத்தால் தெரிவிப்பது, தங்களுடைய வாசகர்களின் அணைவுடன் இதற்கும் ஆதரவு தருமாறு மிகப்பணிவுடன் வேண்டப்படுகின்றீர்கள்- அன்பன், அருகன்.
புலத்தில் 17/04/2010இல் இடம்பெற்ற மரணம் (கொலை) தொடர்பான முக்கிய அறிவித்தல்
இத்தாலி தேசத்தில், பிஸ்தோயா (Lamporecchio(Pistoia)- Italy.) என்னும் இடத்தில் வாழ்ந்த “இராமன் விஜயலக்ஸ்மி” என்னும் 36 வயதுடைய கிளிநோச்சியை பிறப்பிடமாகக் கொண்ட பெண் 17/04/2010 வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு மரணமடைந்துள்ளார் என இத்தாலிய காவல் மற்றும் இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பெண்தொடர்பான மேலதிக காரியங்களை மேற்கொள்வதற்கு அதாவது, மரணவீட்டுக் காரியங்களை நடாத்துவதற்கு உரித்துடையவர்கள், அல்லது, இப்பெண்ணுடைய உறவினர்களின் தகவல் தெரிந்தவர்கள் அவர்களுக்கு இச்செய்தியினை அறிவித்து எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். அல்லது, நேரடியாக இத்தாலியில் உள்ள இலங்கைத்தூதராலயத்துடன் அணுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
இத்தாலியில் உள்ள இலங்கைத்தூதராலயத்தின் வேண்டுகோளுக்கிணங்க
UNGA “ஒருங்கிணைந்த புதிய தலைமுறை ஒன்றியம்”
இத்தாலிய பணிமனை
மக்கள் சேவைப்பிரிவு
இத்தாலி -TP+39 3346708523 / +39 3204031624 (Mrs.Shana)
Mail – arugan@hotmail.it
(இதனை அனைத்து இணையங்களும் பாரபட்சமின்றி வெளியிட்டு உறவினர்களை தொடர்பு கொள்ள ஆவண செய்யவும். )
ஆழுமை இல்லாத இடத்தில் அதிகாரம் இருப்பது பொருந்தாது
அரசனை நம்பி புருசனைக்கைவிட்டமாதிரி இருக்கின்றது கூட்டமைப்பினரின் செயல். மேலும் மீசையில மண்ஒட்டாதது மாதிரி “மக்களாணை” … மக்களாணை என்கின்றார்களே, 22 பாராளுமன்ற உறுப்பினர்களை விட 13 பாராளமன்ற உறுப்பினர் அதிகமோ????
இராஜதந்திரமற்ற கூட்டமைப்பினர், எதிரியின்கையைக் குலுக்காமல் , துரோகியின் காலில் விழாசென்றார்கள். ஆனால் பேச்சு நடத்து தயாராகும் கூட்டமைப்பினருக்கு ஒரு தகவலை “ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒரு தடவை கையைச் சுட்டுக்கொண்டவன் நான். இன்னொரு தடவை அப்படிச் செய்வதற்கு நானொரு முட்டாள் அல்ல வெனத் தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மைச் சமூகத்தை விலைபேசும் துரோகத்தனத்தை ஒருபோதும் செய்யமாட்டேன் எனவும் உறுதிபடக் கூறியுள்ளார். “ தெரிவித்திருக்கும் இந்த கட்சித்தலைவரின் வார்த்தையில் அடையாளம் காட்டப்பட்ட பகுதியை கூட்டமைப்பினர் நன்கு உணரவேண்டும். பிரபாவுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு, கடைசிவரை அரசுடன் மற்றும் எதிர்க்கட்சியுடன் இணைந்திருந்தவர்கள் இப்போது எது செய்தாலும் என்ன கிடைக்கப்போகின்றது. கூட்டமைப்பினருக்கு இன்னும் அறிவு தெளியவில்லை… விரைவில் கூட்டமைப்பின் தலைமை மாற்றப்படவேண்டும். அப்போதுதான் தகுதியான அறிவுகள் செயற்படும். "ஆழுமை இல்லாத இடத்தில் அதிகாரம் இருப்பது பொருந்தாது."
அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -4) – Arugan (18/04/2010)
அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றிவிட்டார்கள் Nanri – arugan.com
திறனும், முயற்சியும், ஆர்வமும் இருப்போரை நிரந்தர மேலுலகிற்கு அனுப்பிய பிரபாகரனிலும் பார்க்க, அதே திறனும், முயற்சியும், ஆர்வமும் இருப்போர்களுக்கு தகுந்த தகுதியை வழங்கும் மகிந்த எவ்வளவோ மேல். அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றிவிட்டார்கள் ஒரு சில பணபலமுடைய தமிழர்கள். இதனால் பப்பாமரம் முறிவடையும் என்றுகூட எண்ணாமல் பப்பாவின் உச்சிக்கே போய்விட்டார் அவர் அதனால் அவர் உச்சியே சிதைவடைந்து போய்விட்டது. ஆனால் மகிந்த எத்தனையோ நல்லகாரியத்தை தமிழர்களுக்கும் நாட்டுநலனுக்கும் மேற்கொண்டிருந்த போதிலும் அதனை பாராட்டவோ செய்தியாக வெளியிடவோ அதே தமிழ் மக்கள் விரும்பவேயில்லை.
பிரபாகரனுடைய போராட்ட அனுபவத்திலும் பார்க்க மகிந்தவுடைய அரசியல் மற்றும் வரலாற்று அனுபவம் அதிகம்…!!!! Nanri arugan.com
இலங்கையில் 2010ன் பாராளுமன்றத் தேர்தலும், தமிழர்களின் (கட்சிகளின்) எதிர்காலமும்…
பிரபாகரனின் ஆயுதபலத்தால் மட்டும் தமிழீழ வல்லரசை அமைத்துவிடலாம், அதிலும் கண்மூடித்திறக்கும் போது ஈழம் மலர்ந்து விடும் என்று பிரச்சாரங்களும் பலருடைய போக்குகளும் நடந்த காலம் இன்னும் கண்முன்நின்று அகலவில்லை!!!
இயேசு “அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார். 42. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; 43. மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். 44. அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.(மாற்கு 6:41-44) என்றால் அதன் உள் அர்த்தத்தையும் உண்மையினையும் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மக்கள் இருக்கும்வரையில் எதுகும் மாறப்போவதில்லை!!!
அதே வேதாகமத்தில் “ரோமர் 7:6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
என்றும், “ Iபேதுரு 4:12 பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,” குறிப்பிட்டிருக்கின்றது. இதிலிருந்து எடுத்துரைக்க முயல்வது எதுவாகில்,, யாரிடம் எது கேட்டால் அது எவ்வாறு நடக்கும் என்பதனை ஓரளவிற்கேனும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது, சிங்களவர்கள் பெரும் பகுதியானவர்களாக இருந்த போதிலும், வீதாசாரத்தில் பார்க்கும் போது, சிங்கள கட்சிகளிலும் பார்க்க தமிழ் கட்சிகள் மிக அதிகமாகவே காணப்படுகின்றது. கடந்த காலத்தில் தமிழ் கட்சிகளில் தலைவர்கள் இரகசியம் இரகசியமாக ஒரு வெளிநாட்டு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள் அதன் விளைவு மேலும் தமிழர்களை சின்னாபின்னமாக்கியது. இதில் அரசியல் தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள்போல், டக்ளசும், கருணாவும் பங்கு பெறவேயில்லை… அதற்கு புலிகளின் ஆதரவாளர்களால் தமக்கு ஏதாவது ஆபத்துவரலாம் என்ற ஐயப்பாட்டை மக்களுக்கு வெளியிட்டாலும் அது எத்தனை தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் பார்க்க வேண்டும். குhரணம் அவர்கள் அக்காலத்தில் இலங்கை அமைச்சர்களாக இருந்ததால் சர்வதேச அரசு பார்காப்பு வழங்கியிருக்கும் என்பதும், அதில் ஏதும் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் புலிகளுக்கான பின்னடைவு புலத்தில் மேலும் அதிகரிக்குமேயொழிய, அதன்மூலம் எந்த சிக்கலும் தீர்ந்திருக்காது என்பதனையும் புரிற்து கொள்ளவேண்டும்.
புலிகளின் தலைவர்கள் தாடர்பாக எழுதும் அருகனின் தகவல்களை உறுதிப்படுத்தும் பிரபல்ய இணையங்கள். Nanri arugan
6ம் திகதி ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் பல தடவைகள் அருகன் தளத்தில், புலிகளின் கடந்த காலத்தில் நடந்த துன்பவியல் சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட நிலைதொடர்பாக வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக பலர் வினாக்களை எழுப்பியிருந்தனர். அதன் விளைவு பல இணையங்களில் தற்போது வெளிவருகின்றன.உதாரணம் அதிர்வு இணையம் பெரும்பான்மை மக்களால்
பார்க்கப்படுகின்ற தளத்தில் ஒன்று என்பது உண்மையே, அவ்வாறான தளத்தில் இது தொடர்பான தகவல்கள் கசிவது, அருகனின் தளத்தில் வெளிவருகின்ற தகவல்களை ஊர்ஜிதப்படுத்துகின்றதாக இஅருக்கின்றது. இதைக்கவனியுங்கள்….
“குறிப்பாகச் சொல்லப் போனால், இராணுவத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் பல மூத்த தளபதிகள் சிறையில் உயிருடன் இருக்கின்றனர், சிலர் காடுகளில் மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்பதே உண்மையாகும்.” xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
